Posts

Showing posts from June, 2022

நாவல்

Image
 வாழ்ந்தவர் கெட்டால் க.நா.சு மின்நூல் 97 பக்கங்கள் வாழ்வு குறித்த ஆழமற்ற, மேலோட்டமான புரிதல்களை கேள்விக்குட்படுத்தி, உன்னதமான தரிசனத்தை அளித்திடும் க.நா.சுவின் குறுநாவல்  இம்மின்நூல்.  பொருள் வேட்கை கொண்டோ அல்லது சலியாத உழைப்பின் மூலமாகவோ  ஒரு தலைமுறை அடைந்துவிடும் பொருளாதார அனுகூலங்கள், தொடர்ச்சியான உழைப்பு இல்லாதபோதும், புறச் சூழல்களின் சாதகமற்ற நிலைகளிலும் எதிர்பாரா வீழ்ச்சிகளை அடைகிறது.  வீழ்ச்சிக்குப் பின்னரும் சமகால சூழலுக்கு பொருந்தாமல், ஸ்தானத்தை தக்கவைக்கவும் இயலாமல் வாழ்வு நெருக்கடிகள் மிகுந்ததாகவே மாறிவிடுகிறது.  மம்மேலியார் குடும்பத்தினர் ரகுவின் மீது நேர்மறை சிந்தனை கொண்டவர்களாகவே இருந்தபோதும், தன் தந்தையின் செய்கைகள் குறித்து குற்ற உணர்வினால் பீடிக்கப்பட்டு சதாசிவத்தை கடுமையாக வெறுக்கிறார் ரகு.  சதாசிவம் கொஞ்சமும் கூச்சமில்லாமல் பிறரது பணத்தில் காலம் தள்ள எண்ணுவதும், அனைவரது எள்ளல்களை உதாசீனப்படுத்துவதுமாக வாழ்கிறார்.  'வாழத் தகுதியற்றவன்' என்ற சொல்லை கேட்ட மறுவினாடி ரயில் முன் பாய்ந்து உயிர் துறக்கிறார்.  என்னதான் நடந்திருக்கும் என்று அறியும் ஆர்வ மிகுதியில் செயல