Posts

கதைகள்

Image
புத்த மணியோசை  கன்னடச் சிறுகதைகள் தொகுப்பும் மொழியாக்கமும்  கே நல்லதம்பி எதிர் வெளியீடு 136 பக்கங்கள் விலை ரூபாய் 180  வெவ்வேறு சிறுகதையாசிரியர்களின் 10 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். அனைவரும் முற்போக்கான சிந்தனை கொண்டவர்கள் என்பதே இத்தொகுப்பின் ஒற்றையான பொதுப்பண்பு.  மற்றபடி வெவ்வேறு சூழல்கள், தனித்த கதை மாந்தர்களைக் கொண்டுள்ள கதைகள் இவை.  இரவுப் பயணத்தில், தனித்த சூழலில், ஆண் மட்டும்தான் தாபத்தை வெளிப்படுத்த தகுதியானவனா என்ற கேள்வியை முன்வைக்கிறது 'பயணம்'.  இணைதலுக்குப் பின்பு ஆண் சிலந்தியை கொன்று விழுங்கும் பெண் சிலந்தி 'பிளாக் விடோ'வை பெரும் ஆர்வத்துடன் ரசித்து உற்று நோக்கும் கோகிலா, அவளது வாழ்வின் பெரும் சோகத்தை அறிந்து தனது வாழ்வுடன் பொருத்திப் பார்க்கும் மற்றொரு பெண் 'பதி' என்றவாறு பெண் மையக் கதைகள் இத்தொகுப்பில் அமைகின்றன.  மாய யதார்த்த வாதத்தில் அமையும் 'நான் கொன்ற பெண்', அறத்தை மீட்டெடுக்க முயலும் 'புத்த மணியோசை', சமூக ஊடகங்களின் தாக்கம், அபாயங்களைக் குறித்து மிகச்சிறிய அளவில் புனையப்பட்டிருக்கும் 'டைப்பிஸ்ட் நிராகரித்த கதை' அனை

வரலாறு

Image
புதுமைப்பித்தன் வரலாறு தொ.மு.சி ரகுநாதன் மின்னூல் 291 பக்கங்கள் 'வறுமையும்-புலமையும்' சொல்லாடலுக்கு மேலும் ஒரு சான்று புதுமைப்பித்தனின் வாழ்வு. தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்கு முன்னோடியான புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை தனது நேரிடையான அனுபவத் தொகுப்பில் இருந்து வாசகர்களுக்கு அளித்திருக்கிறார் தொ.மு.சி ரகுநாதன்.  மணிக்கொடி அலுவலகத்திற்கு வருகை தந்த புதுமைப்பித்தனுக்கு இரண்டு ரூபாய் அப்போதைய உணவுச் செலவுக்காக அளிக்கப்படுகிறது. சில நாட்களை அப்பணத்தைக் கொண்டு அவர் சமாளித்து விடுவார் என்று மணிக்கொடி எழுத்தாளர்கள் நினைத்திருக்க, இவர் புத்தகங்களையும், சுருட்டையும் வாங்கி வந்து நிற்கிறார்.  மேற்கண்ட நிகழ்வு எட்டயபுரம் மன்னரிடம் பணிக்குச் சேர்ந்தபின் கிடைத்த பணத்தில் பாரதி, புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்ததை நினைவுபடுத்துகிறது.  செல்லம்மாவின் துயருக்கு சற்றும் குறைவில்லாதது புதுமைப்பித்தனின் துணைவியார் கமலா அம்மாவின் துயர் என்றால் மிகையில்லை.  மேதமை மிகுந்த படைப்பாளிகள் சமகால வாழ்வில் இருந்து விலகிய கனவுலக சஞ்சாரம் மிகுந்தவர்களாகவே இருக்கிறார்கள். அரசு வேலை கிடைக்காமை, வக்கீல் ஆக முய

கட்டுரைகள்

Image
 காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை அருந்ததி ராய் தமிழில் மணி வேலுப்பிள்ளை காலச்சுவடு பதிப்பகம் 119 பக்கங்கள் விலை ரூபாய் 140 தனது தனித்த அறச்சீற்றங்களுக்காகவும், துணிச்சலான செயல்பாடுகளுக்காகவும் அறிவு தளத்தில் பரவலாக அறியப்பட்ட அருந்ததி ராயின் காஷ்மீர் குறித்த, நாடாளுமன்ற தாக்குதல் குறித்த ஏழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இச்சிறு நூலை விரைவாக வாசித்துவிட இயலவில்லை. தேய்ந்துபோன, தட்டையான, பொது மனநிலையை, கூர்மையாக கேள்விக்குள்ளாக்கும் கருத்துகள் நிறைந்தவை இக்கட்டுரைகள்.  கடந்த நூற்றாண்டின் தீர்க்கவே இயலாத பிரச்சனையாக நீடித்த காஷ்மீர் விவகாரம், 21ம் நூற்றாண்டிலும் அவ்வாறே நீடித்த வண்ணம் உள்ளது. மதவாதிகளுக்கு தேசப்பற்று மற்றும் எதிர் தரப்பினரின் மீது வெஞ்சினம் ஏற்படுத்தவும் இவ்விவகாரம் பயன்பட்டு விடுவது தெளிவு.  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் எவ்வித பின்புலமும் அற்ற சாமானியர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுகையில் எவ்வித கொடுமைகளை எல்லாம் அனுபவிக்க நேரிடுகிறது என்பதை ஒவ்வொரு கட்டுரையும் தீர்க்கமாக பேசி விடுகிறது.  சித்திரவதை முகாம்கள், விசாரிக்கப்படும் முறைகள் குறித்து வாசித்து அறிகைய

வரலாறு

Image
இந்தியாவின் சுருக்கமான வரலாறு ஜான் ஜுபர்ஸிக்கி தமிழில் அரவிந்தன் காலச்சுவடு பதிப்பகம் 296 பக்கங்கள் விலை ரூபாய் 190  துணைக்கண்டத்தின் 5000 ஆண்டு கால நெடிய வரலாற்றை 300 பக்கங்களுக்குள் மிகவும் சுருக்கமாக தொகுத்து அளித்திருக்கிறார் ஜான் ஜூபர்ஸிக்கி. வரலாற்றை வாசித்தல் மிகவும் மகிழ்வு தரக்கூடியது. மேம்பட்ட எழுத்தில் இந்திய வரலாற்றை வாசித்தது பெருமகிழ்வு அளித்தது.  200 ஆண்டுகால  காலணிய ஆட்சி குறித்து பள்ளி பாடப் புத்தகங்களில் வாசித்தது என்றபோதும், ஆர்வமிகுதியில் தேர்வு நோக்கிலன்றி வரலாற்று நூல்களை வைத்திருந்தபோது நண்பர்களின் ஏளனத்திற்கு ஆளாகியது நினைவுக்கு வருகிறது.  இந்நூல் ஐயாயிரம் ஆண்டுகள் பின்னோக்கி இழுத்துச் சென்று இந்திய வரலாற்றை ஜோடனையின்றி விளக்கிச் செல்கிறது. ஈர மண்ணில் எழுதி வைத்த குறிப்புகள் வரலாற்று ஆவணங்களாக மாறியது வியப்பை ஏற்படுத்திவிடுகின்றன. பாரபட்சமற்ற சமூகமாக, நகர அமைப்பில் வாழ்ந்த மக்களைக் குறித்து அறிகையில் வியப்பும் மகிழ்ச்சியும் ஏற்படுகின்றன.  ஆப்பிரிக்காவுக்கு அடுத்து துணைக் கண்டமே மனிதர்கள் நெடு நாட்களாக வசித்த பகுதி என்பதை அறிகையில் நமது பாரம்பரியம் பெருமிதத்தை ஏற

நாவல்

Image
 மலை மேல் நெருப்பு  அனிதா தேசாய்  தமிழில் அசோகமித்திரன் சாகித்ய அகாடமி வெளியீடு  154 பக்கங்கள்  170 ரூபாய்  மனிதரின் ஆளுமைகள் சிறு குழுக்களில் பெரிதாக வெளிப்பட்டு விடுகின்றன. பலவீன மனதுடையவர்களின் தற்காப்பு நடத்தைகள்கூட அங்கு எடுபடுவதில்லை.  தனிமை, மனித வாழ்வின் மற்றொரு பரிமாணம். அன்பையும், அங்கீகாரத்தையும் தேடியலையும் மனம்தான் தவிர்க்க முடியாத வண்ணம் தனிமையையும் நாடுகிறது. இது ஒரு அழகிய நகை முரண்.  நந்தா கவுல் கரிக்னானோவில் தனிமையில் வசிக்கிறார். பழைய நினைவுகளும், ஏக்கங்களும் சிந்தனையில் ஊசலாடுகின்றன.  வெறும் நான்கு கதாபாத்திரங்களுடன் 200 பக்கங்களுக்கும் குறைவாக எழுதப்பட்டுள்ள இந்நாவல், கட்டமைப்பு நேர்த்தியுடன் தனித்துவமான வாசிப்பு அனுபவத்தை ஏற்படுத்திவிடுகிறது. 'நான்தான் என் கடமைகளை நிறைவு செய்து விட்டேனே, என்னை ஏன் மீண்டும் மீண்டும் தொந்தரவு செய்கிறீர்கள்?' என்ற வரி, வயது முதிர்ந்தவளின் ஆரம்பகால கடின உழைப்புகளையும், முதிர்ந்த காலத்து அமைதி தேடலையும் வெளிப்படுத்துகிறது.  தனது கொள்ளுப்பேத்தி ராக்காவின் வருகை நந்தா கவுலுக்கு எவ்வித பெரிய மகிழ்ச்சியையும் அளிக்காதது போன்றே ராக்கா

நாவல்

Image
 துலக்கம்  ஒரு பிழையின் மறு விசாரணை யெஸ் பாலபாரதி மயில் புக்ஸ் 120 பக்கங்கள் 120 ரூபாய்  தமிழ்ச் சமூகத்தில் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றவர்கள் தன்னம்பிக்கையுடன் நடமாடுகின்றனர். இரண்டு பெண் குழந்தைகளைப் பெற்றவர்களிடம் அன்பு நிறைந்திருக்கிறது.  ஆணோ, பெண்ணோ சிறப்புக் குழந்தைகளை பெற்றவர்களை சமூகம் பரிதாபமாகத்தான் பார்க்கிறது. அப்பார்வைகளில் ஏளனமும் நிறைந்துள்ளதை மறுக்க இயலாது.  இப்படியான புரிதலற்ற மனிதர்கள் நிறைந்துள்ள சமூகத்தில், ஆட்டிச நிலையாளன் ஒருவன் தொலைந்து போகையில், அவனும் அவனைப் பெற்றவர்களும் அனுபவிக்க நேர்ந்திடும் கொடுமைகளை விறுவிறுப்பாக, மிகையின்றி சொல்கிறது இந்நாவல்.  தம்பதியினரிடம் துவக்கத்தில் தோன்றும் 'நமக்கு மட்டும் ஏன் இப்படியொரு நிலை?' 'யார் இதற்குக் காரணம்?' போன்ற குழப்பங்களுக்கு முடிவாக நிலையை ஏற்றுக் கொள்ளுதல், என்பது தீர்வாக அமைகிறது.  பொறுமையும், விடாமுயற்சியும், சகிப்புத்தன்மையும் சிறப்பு குழந்தைகளின் பெற்றோருக்கு மிகுதியாகத் தேவைப்படுவது போன்று, மனித நேயமும், கருணையும் பொதுச் சமூகத்திற்கு தேவைப்படுகிறது.  சில ஆண்டுகளுக்கு முன்பு எங்கள் பள்ளியில் ஆட்

கட்டுரைகள்

Image
வாழ்க்கை கட்டுரைகள் லியோ டால்ஸ்டாய் தமிழில் ப.ராமஸ்வாமி மின்னூல் 136 பக்கங்கள் வாழ்க்கையின் புதிர்களை, எதிர்பாராமைகளை, மனித மனங்களை, வாழ்வை, மரணத்தை, மரணத்திற்குப் பிந்தைய வாழ்வினை தத்துவார்த்தமாக விவரிக்கும் நூல் இது.  எத்தனை படித்தவராய் இருப்பினும், பண்பட்டவராக, அனுபவங்களில் மேம்பட்ட நிலையை அடைந்தவராய் இருப்பினும் வாழ்வில் எதிர்ப்படும் வினோதங்களில் இருந்து தப்பியவர் எவரும் இருக்க முடியாது.  தனது மகளின் மரணத்தின்போது 'இத்தனை படித்தும் எழுதிக் குவித்தும் வாழ்க்கையின் தாத்பரியம் எனக்கு விளங்கவே இல்லையே' என்று டால்ஸ்டாய்  கதறியதாக எங்கோ வாசித்த நினைவு.  தனக்கென மட்டுமே வாழாதவனுக்கே அச்சமற்ற வாழ்வு சாத்தியப்படுகிறது. அத்தகைய வாழ்வு மீதான அணுகலும், விலகலுமே பெரும்பாலான மனிதருக்கு சாத்தியப்படுகிறது. 'ஒவ்வொரு உயிருக்கும் தன் வாழ்வே பெரிது, தன் நலனே முக்கியம் என்ற உணர்ச்சி இருக்கிறது. அப்படியிருந்தும் மனிதன் எல்லா உயிர்களும் தன் சுகத்திற்காகவே அமைந்தவை என்று கருதுகிறான்'.  ஒரு இடத்தில் நீண்ட நாட்கள் வசித்தபின் அல்லது பணியாற்றியபின் எதேச்சையாக அவ்விடத்தை நீங்கிச் சென்றபின் பழைய