நினைவுகள்
பாரதி நினைவுகள் ம.கோ யதுகிரி அம்மாள் சந்தியா பதிப்பகம் 224 பக்கங்கள் விலை ரூபாய் ₹150 பாரதியின் தீர்க்க தரிசனம் மிகுந்த சிந்தனையையும், வியக்க வைக்கும் மேதைமையையும் அருகில் இருந்த காணக் கிடைக்கும் நல்லூழ் அமையப்பெற்றிருக்கிறார் யதுகிரி. பாரதியின் இரு மகள்களுடன் மூன்றாம் மகளாகவே செல்லம்மாவால் நடத்தப்பட்டிருக்கிறார் அவர். மனைவியிடம் கடிந்து பேசும் பாரதி, யதுகிரியின் சீற்றமான கேள்விகளுக்கும் மிகவும் பொறுமையாகவே பதில் அளித்திருக்கிறார். ஆற்றாமையில் புலம்பியும் இருக்கிறார். இளம் வயதில் மறைந்து விட்ட மேதைகளின் சொற்ப வாழ்நாளில் உடன் இருந்தவர்கள் பொக்கிஷம் போன்றவர்கள் என்பதன் அடிப்படையில் யதுகிரியின் பார்வை முக்கியத்துவம் பெறுகிறது. சொல்லுக்கும் செயலுக்கும் வேறுபாடு ஏதுமின்றி வாழ்ந்த பாரதி, அந்த அரிய குணத்திற்காகவே அன்றைய சமூகத்தால் புறக்கணிக்கப்பட்டு ஒதுக்கப்பட்டிருப்பதை யதுகிரியின் பார்வையில் காண முடிகிறது. கணவரின் துல்லியமான, நேர்மையான பேச்சாலும், நடத்தைகளாலும் பெரும் சங்கடங்களை அனுபவிக்கும் செல்லம்மா தியாக வாழ்வு வாழ்ந்திருக்கிறார்...