Posts

Showing posts from January, 2024

கதைகள்

Image
வங்கச் சிறுகதைகள் மின்னூல் தொகுப்பு அருண்குமார் மகோபாத்தியாய் தமிழில் சு கிருஷ்ணமூர்த்தி   வங்க எழுத்தாளர்களின் 21 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். மலையாள, கன்னட இலக்கிய  உலகங்களைப் போன்று வங்க இலக்கியமும் செழுமைமிக்கதுதான் என்பதை உணர்த்தும் நூலாகவும் இது அமைந்துவிட்டது. சில வருடங்களுக்கு முன்பு சென்னை புத்தகக் காட்சியில்  நேஷனல் புக் ட்ரஸ்ட் ஸ்டாலில் மிகமிக குறைவான விலையில் இந்நூல் கிடைத்தது. பிறகு வேறொரு தருணத்தில் கிண்டிலில்  இந்நூலை விலையின்றி தரவிறக்கம் செய்தேன். கிண்டிலில் வாசித்துக் கொண்டிருக்கையில் அச்சு நூலுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் கதைகளின் வரிசை மட்டுமே மாறி இருந்ததை கவனித்தேன். 21 கதைகளும் மிகமிக சிறப்பான வாசிப்பு அனுபவம் அளித்தவை. மனிதநேயம், பகடி, வாதை போன்ற இலக்கியத்தின் மையச் சரடுகளுக்கு பொருந்திவிட்ட அதீதமான கதைகள் இவை.  மனநலம் குன்றியவனை குறிப்பிட்டதொரு தருணத்தில் குடும்பத்தினர் இழிவாகக் குறிப்பிட, விளைவு நம்ப முடியாததாய் அமைந்து மனதை வாட்டுகிறது.  விடைத்தாள் திருத்துபவருக்கு உயர்கல்வி பயிலும் மாணவன் ஒருவன் தேர்வு விடைத்தாளில் எழுதிடும் நீண்ட கடிதம் அவனது வாதைகளை மிகை

கட்டுரைகள்

Image
கலை இலக்கிய சங்கதிகள் விட்டல் ராவ்  ஜெய்ரிகி பதிப்பகம் 204 பக்கங்கள்  வாசிப்பு, ஆளுமைகள், நூல் விமர்சனங்கள், ஓவியம் குறித்த 39 கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். விட்டல் ராவின் தீர்க்கமான, சமரசமற்ற கருத்துக்கள் வாசிப்பில் புதிய திறப்புகளை சாத்தியப்படுத்த வல்லவை. எண்பதுகளில் தொடங்கி தினமணி நாளிதழ்களையும், 90களில் இந்தியா டுடே இதழ்களையும் தொடர்ச்சியாக வீட்டில் வாசித்திருக்கிறோம். சகோதர சண்டைகள்கூட நடந்திருக்கின்றன.  ஒருவர் வாசித்து முடிக்கும்வரை மற்றவர் கண்களில் அகப்படாமல் இருக்க இதழ்களை ஒளித்து வைத்த நிகழ்வுகளும் உண்டு. காலவோட்டத்தில் தீவிரமாக வாசித்தவர் லௌகீகங்களில் உந்தப்பட்டு அந்நியப்படுதலும், மிதமான வாசிப்பு ஆர்வம் கொண்டவர் வாசிப்பின் மாயச் சுழலில் சிக்கிக் கொள்வதும் நடந்து விடுகிறது. உண்மையில் குழந்தைப் பருவத்தில் ஏற்பட்டுவிடும் வாசிப்பழக்கமே நாளடைவில் வளர்ந்த மனிதனை ஆற்றுப்படுத்தி வாழ்வின் எதிர்பாராமைகளையும், வலி தரும் ஏமாற்றங்களையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தை அளிக்கிறது. க.நா.சு,  ந.பிச்சமூர்த்தி, அசோகமித்திரன் போன்ற தமிழ் இலக்கிய பேராளுமைகளை மிக அழகாக நினைவுகூரும் வகையிலான கட்டுர