Posts

Showing posts from May, 2024

கதைகள்

Image
புத்த மணியோசை  கன்னடச் சிறுகதைகள் தொகுப்பும் மொழியாக்கமும்  கே நல்லதம்பி எதிர் வெளியீடு 136 பக்கங்கள் விலை ரூபாய் 180  வெவ்வேறு சிறுகதையாசிரியர்களின் 10 சிறுகதைகளின் தொகுப்பு இந்நூல். அனைவரும் முற்போக்கான சிந்தனை கொண்டவர்கள் என்பதே இத்தொகுப்பின் ஒற்றையான பொதுப்பண்பு.  மற்றபடி வெவ்வேறு சூழல்கள், தனித்த கதை மாந்தர்களைக் கொண்டுள்ள கதைகள் இவை.  இரவுப் பயணத்தில், தனித்த சூழலில், ஆண் மட்டும்தான் தாபத்தை வெளிப்படுத்த தகுதியானவனா என்ற கேள்வியை முன்வைக்கிறது 'பயணம்'.  இணைதலுக்குப் பின்பு ஆண் சிலந்தியை கொன்று விழுங்கும் பெண் சிலந்தி 'பிளாக் விடோ'வை பெரும் ஆர்வத்துடன் ரசித்து உற்று நோக்கும் கோகிலா, அவளது வாழ்வின் பெரும் சோகத்தை அறிந்து தனது வாழ்வுடன் பொருத்திப் பார்க்கும் மற்றொரு பெண் 'பதி' என்றவாறு பெண் மையக் கதைகள் இத்தொகுப்பில் அமைகின்றன.  மாய யதார்த்த வாதத்தில் அமையும் 'நான் கொன்ற பெண்', அறத்தை மீட்டெடுக்க முயலும் 'புத்த மணியோசை', சமூக ஊடகங்களின் தாக்கம், அபாயங்களைக் குறித்து மிகச்சிறிய அளவில் புனையப்பட்டிருக்கும் 'டைப்பிஸ்ட் நிராகரித்த கதை' அனை

வரலாறு

Image
புதுமைப்பித்தன் வரலாறு தொ.மு.சி ரகுநாதன் மின்னூல் 291 பக்கங்கள் 'வறுமையும்-புலமையும்' சொல்லாடலுக்கு மேலும் ஒரு சான்று புதுமைப்பித்தனின் வாழ்வு. தமிழ்ச் சிறுகதை இலக்கியத்துக்கு முன்னோடியான புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றை தனது நேரிடையான அனுபவத் தொகுப்பில் இருந்து வாசகர்களுக்கு அளித்திருக்கிறார் தொ.மு.சி ரகுநாதன்.  மணிக்கொடி அலுவலகத்திற்கு வருகை தந்த புதுமைப்பித்தனுக்கு இரண்டு ரூபாய் அப்போதைய உணவுச் செலவுக்காக அளிக்கப்படுகிறது. சில நாட்களை அப்பணத்தைக் கொண்டு அவர் சமாளித்து விடுவார் என்று மணிக்கொடி எழுத்தாளர்கள் நினைத்திருக்க, இவர் புத்தகங்களையும், சுருட்டையும் வாங்கி வந்து நிற்கிறார்.  மேற்கண்ட நிகழ்வு எட்டயபுரம் மன்னரிடம் பணிக்குச் சேர்ந்தபின் கிடைத்த பணத்தில் பாரதி, புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்ததை நினைவுபடுத்துகிறது.  செல்லம்மாவின் துயருக்கு சற்றும் குறைவில்லாதது புதுமைப்பித்தனின் துணைவியார் கமலா அம்மாவின் துயர் என்றால் மிகையில்லை.  மேதமை மிகுந்த படைப்பாளிகள் சமகால வாழ்வில் இருந்து விலகிய கனவுலக சஞ்சாரம் மிகுந்தவர்களாகவே இருக்கிறார்கள். அரசு வேலை கிடைக்காமை, வக்கீல் ஆக முய

கட்டுரைகள்

Image
 காஷ்மீர்: சீற்றம் பொதிந்த பார்வை அருந்ததி ராய் தமிழில் மணி வேலுப்பிள்ளை காலச்சுவடு பதிப்பகம் 119 பக்கங்கள் விலை ரூபாய் 140 தனது தனித்த அறச்சீற்றங்களுக்காகவும், துணிச்சலான செயல்பாடுகளுக்காகவும் அறிவு தளத்தில் பரவலாக அறியப்பட்ட அருந்ததி ராயின் காஷ்மீர் குறித்த, நாடாளுமன்ற தாக்குதல் குறித்த ஏழு கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். இச்சிறு நூலை விரைவாக வாசித்துவிட இயலவில்லை. தேய்ந்துபோன, தட்டையான, பொது மனநிலையை, கூர்மையாக கேள்விக்குள்ளாக்கும் கருத்துகள் நிறைந்தவை இக்கட்டுரைகள்.  கடந்த நூற்றாண்டின் தீர்க்கவே இயலாத பிரச்சனையாக நீடித்த காஷ்மீர் விவகாரம், 21ம் நூற்றாண்டிலும் அவ்வாறே நீடித்த வண்ணம் உள்ளது. மதவாதிகளுக்கு தேசப்பற்று மற்றும் எதிர் தரப்பினரின் மீது வெஞ்சினம் ஏற்படுத்தவும் இவ்விவகாரம் பயன்பட்டு விடுவது தெளிவு.  உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் எவ்வித பின்புலமும் அற்ற சாமானியர்கள் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுகையில் எவ்வித கொடுமைகளை எல்லாம் அனுபவிக்க நேரிடுகிறது என்பதை ஒவ்வொரு கட்டுரையும் தீர்க்கமாக பேசி விடுகிறது.  சித்திரவதை முகாம்கள், விசாரிக்கப்படும் முறைகள் குறித்து வாசித்து அறிகைய