நாவல்

கர்ணன் காலத்தை வென்றவன் சிவாஜி சாவந்த் தமிழில் நாகலட்சுமி சண்முகம் 1339 பக்கங்கள் மின்நூல் மகாபாரதம் போன்ற வண்ணமயமான இதிகாசம் ஒன்று உலகின் வேறெந்த நாட்டிலும் இருக்குமா? தெரியவில்லை. மகாபாரதத்தை மையப்படுத்தி பீமனின் பார்வையில் எம்டி வாசுதேவன் நாயரின் 'இரண்டாமிடம்', திரௌபதியின் பார்வையில் பிரதீபா ராயின் 'திரௌபதியின் கதை', பிரபஞ்சனின் 'மகாபாரதம்', எஸ் எல் பைரப்பாவின் 'பருவம்' நூல்களைத் தொடர்ந்து வாசிக்க கிடைத்த நூல் சிவாஜி சாவந்தின் 'கர்ணன்'. மேற்கண்ட நூல்களைப் போன்று 'கர்ணன்' பெரிதாக ஒன்றும் ஈர்த்து விடவில்லை. மிகமிக சாதாரணமான மொழிநடை, தொலைக்காட்சி தொடருக்கு திரைக்கதை அமைத்தது போன்றுள்ளது. கர்ணனின் தம்பி 'ஷோன்' கர்ணனது ஒன்றுக்கு மேற்பட்ட மனைவியர் போன்ற தகவல்களே புதியவையாக இருந்தன. வியத்தகு ஆற்றல் கொண்டிருந்த போதிலும் 'சூதபுத்திரன்' என்றவாறு வாழ்வு முழுமையும் ஏளனப்படுத்தப்படுகிறான் கர்ணன். கர்ணனின் வளர்ப்பு தந்தை தேரோட்டி அதிரதன், அரச குலத்தை சேர்ந்தவராக தன்னை சொல்லிக் கொள்வது மற்றுமொரு புதிய தகவல். அணுகல்- விலகல் போரா...