கட்டுரைகள்

இதுவே சனநாயகம் தொ. பரமசிவன் காலச்சுவடு பதிப்பகம் 127 பக்கங்கள் சமூக பண்பாட்டு ஆய்வாளரான தொ.பரமசிவனின் கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். அரிய தகவல்களை எளிய மொழியில் நேர்த்தியாக எழுதிச் செல்கிறார் தொ.ப கடவுள் வழிபாட்டின் தொடக்க காலத்தில் பெண்களே பூசாரிகளாக இருந்துள்ளனர் என்ற தகவல் புதிதாகத்தான் இருக்கிறது. மகாராணி, கோமகன் போன்ற வார்த்தைப் பிரயோகங்களும், மதுரை மீனாட்சி அம்மனின் பட்டாபிஷேகத் திருவிழா பற்றிய குறிப்பும் முதல் கட்டுரையிலேயே இடம்பெறுகின்றன. சிறுதெய்வ வழிபாடு தொடர்ச்சியாக, உறுதியாக அழிக்கப்பட்டமையை அறிகையில் பெரும் அதிர்ச்சியும், ஆசுவாசமும் ஏற்படுகின்றன. சிறுவயதில் வீட்டு பெரியவர்களின் வற்புறுத்தலுக்கு இணங்கி 'கோளறு பதிகம்' படித்திருக்கிறேன். //கிபி ஏழாம் நூற்றாண்டில் மதுரையில் ஆயிரம் சமணர்களை கழுவில் ஏற்றி சம்பந்தர் 'புண்ணியம்' தேடிக்கொண்ட பிறகும் தமிழ்நாட்டின் தென்பகுதியில் சமணம் பன்னிரெண்டாம் நூற்றாண்டு வரை உயிரோடு இருந்தது.// மேற்கண்ட வரிகளை வாசித்து முடித்த போது சம்பந்தர் பற்றிய மென்மையான பிம்பம் விழுந்து நொறுங்கியது. அழிந்துபோனவ...